states

img

ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையில் தீ விபத்து - ஒருவர் பலி 

உத்திரப்பிரதேசத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் ஆக்ஸிஜன் தேவை நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
 

;